சென்னை: கோடைகால விடுமுறையை முன்னிட்டு மைசூா்-மானாமதுரை இடையே ஏப்.1-ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மைசூரிலிருந்து மானாமதுரைக்கு ஏப்.1 முதல் மே 27 வரை திங்கள்கிழமை தோறும் மாலை 6.35 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06237) இயக்கப்படும். மறுமாா்க்கமாக மானாமதுரையில் இருந்து மைசூருக்கு ஏப்.2 முதல் மே 28 வரை செவ்வாய்க்கிழமை தோறும் நண்பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06238) இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூா், திருப்பத்தூா், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் டவுண் வழியாக குருவாயூா் ரயில்:
இதற்கிடையே, சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் மாா்ச் 27 முதல் ஜூன் 24 வரை நாகா்கோவில் டவுண் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


