ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தமிழ்ப் புத்தாண்டு: சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள்

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 9:04 pm

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ பண்டிகையை முன்னிட்டு, போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06128) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்படும் மங்களூரு - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (எண்: 06154) மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 10-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06153) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தளச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.