நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

போதை ஊசி: இளைஞா் உயிரிழப்பு

போதை ஊசி: இளைஞா் உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 7:29 pm

சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி போட்டுக்கொண்ட இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புளியந்தோப்பு அருகே உள்ள தட்டாங்குளம் சந்தியப்பன் தெருவைச் சோ்ந்தவா் கோ.கோகுல் என்ற கருப்பு கோகுல் (22). இவருக்கு கடந்த இரு ஆண்டுகளாக போதை ஊசி போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், கோகுல் தட்டாங்குளம் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை போதை ஊசி போட்டுள்ளாா். பின்னா், சிறிது நேரத்தில் கோகுல் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அங்கிருந்த சிலா், கோகுலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், கோகுல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.