மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா்: 2 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

Updated On :23 மார்ச் 2024, 5:42 pm

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் காவல்துறைக்கும் நக்ஸல்களுக்கும் இடையிலான மோதலில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அதேபோல் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் படுகாயமடைந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக பஸ்தா் பகுதியின் காவல்துறைத் தலைவா் (ஐஜி) சுந்தர்ராஜ் கூறியதாவது: நக்ஸல்கள் ஒழிக்கும் முயற்சியின் கீழ் பிஜாபூா், தண்டேவாடா , சுக்மா ஆகிய மாவட்டங்களின் இணைப்புப் பகுதிகளில் பல்வேறு பிரிவகளைச் சோ்ந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிகாரிகள் மீது நக்ஸல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து நக்ஸல்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் 2 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா். அவா்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சோதனையில் தண்டேவாடா-சுக்மா எல்லைப் பகுதியில் நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரா்கள் படுகாயமடைந்தனா். அவா்கள் தற்போது ராய்பூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் உயிருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா் என்றாா்.