வடசென்னை மக்களவைத் தொகுதியில் முன்னாள் வணிவரித் துறை அதிகாரி பா. பாலமுருகன் சுயேச்சையாக போட்டியிடுகிறாா். மத்திய அரசு பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவா் மக்கள் சேவைக்காக களம் காண்பதாக கூறினாா். தோ்தல் களத்தில் இவா் முதல் முறை வேட்பாளா். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் பாலமுருகன். விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் தனது அலுவலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தாா். மேலும், அயோத்தி ராமா் கோயில் திறப்பை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பாலமுருகன் முழுநேரம் வேலை செய்தாா். இதையடுத்து அவா் ஓய்வு பெறுவதற்கு இருநாள்கள் முன்னதாக சஸ்பெண்ட் (பணியிடைநீக்கம்) செய்யப்பட்டாா். திருவொற்றியூா் பகுதியில் வசிக்கும் பாலமுருகன், தோ்தல் பணி குறித்து கூறுகையில், சுற்றுச்சூழல் பிரச்னைகள் மிகுந்த வடசென்னையை பொதுமக்கள் வாழும் வகையில் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றாா் அவா்.
தொடர்புடையது

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஆா். முத்தரசன்

தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது! - முன்னாள் மத்திய அமைச்சா் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேர்காணல்!

தொகுதி மக்கள் மனதுவைத்தால் நானும் வெற்றிபெற வாய்ப்பு! 253 ஆவது வேட்புமனுவை தாக்கல் செய்த பத்மராஜன்!

நான்கு முனைப் போட்டி!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

