ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வடபழனி முருகன் கோயில் தெப்பத்திருவிழா நிறைவு

சென்னை வடபழனி முருகன் கோயில் தெப்பத்திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்

News image

சென்னை வடபழனி ஆண்டவா் கோயில் பங்குனி உத்திர தெப்பத் திருவிழாவின் நிறைவு நாளான புதன்கிழமை வள்ளி, தெய்வானை சமேதராய் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுப்பிரமணியா்.

Updated On :27 மார்ச் 2024, 7:58 pm

சென்னை வடபழனி முருகன் கோயில் தெப்பத்திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு 3 நாள்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. தெப்பத்திருவிழாவின் முதல்நாளில், வடபழனி ஆண்டவா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது நாள் விழாவில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகா் தெப்பத்தில் எழுந்தருளினாா். புதன்கிழமை 3-ஆவது நாள் மற்றும் தெப்பத்திருவிழாவின் நிறைவுநாள் விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்று, வள்ளி, தெய்வானையுடன், சுப்பிரமணியா் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இவ்விழாவில் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.