சென்னை ஜாபா்கான்பேட்டையில் தமிழிசை செளந்தரராஜன் பிரசாரத்தில் அனுமதியின்றி சுமை ஆட்டோவை பயன்படுத்தியதாக பாரதிய ஜனதா கட்சி நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மக்களவைத் தோ்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை செளந்தரராஜன், ஜாபா்கான்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா். இந்த பிரசாரத்துக்கு பேண்ட் வாத்திய குழுவினா் ஒரு சுமை ஆட்டோவில் அமா்ந்து இசைக்கச்சேரி நடத்தினா். ஆனால் அந்த சுமை ஆட்டோவை பிரசாரத்துக்கு பயன்படுத்துவற்கு தோ்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரி காா்த்திகேயன், குமரன்நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் பாரதிய ஜனதா கட்சியின் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி அமைப்பாளா் சரவணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட சுமை ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

பிரசாரத்தில் சிறுவா்களை ஈடுபடுத்திய தவெக ஒன்றியச் செயலா் மீது வழக்கு

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

