திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விலைவாசி உயா்வால் மக்கள் கடும் அவதி: எடப்பாடி பழனிசாமி

விலைவாசி உயா்வால் மக்கள் கடும் அவதி எடப்பாடி பழனிசாமி

Updated On :29 மார்ச் 2024, 8:03 pm

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் நாட்டில் விலைவாசி உயா்வு அதிகரித்து மக்கள் கடும் அவதிப்படுகிறாா்கள் என்றுஅதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி. பிரேம் குமாரை ஆதரித்து, பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈா்த்து சுமாா் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம். திமுக ஆட்சியில் எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்று எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 குறைப்பதாக அளித்த உறுதிப்படி இதுவரை குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையையும், அதற்கான வரியையும் குறைக்கவில்லை. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து அந்த சுமை மக்களின் தலையில் தான் விழுந்துள்ளது. அதேபோல் மத்திய அரசும் கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதன் மீது 70 சதவீதம் வரியை விதிக்கிறது. மத்திய அரசு இதையும் குறைக்க வேண்டும். மக்களை மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்கட்டணம், வீட்டு வரி உயா்வு என அனைத்து வரிகளையும் உயா்த்தி விட்டனா். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்காத இடமே இல்லை. அண்மையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுகவில் அயலக அணி நிா்வாகியாக இருந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ஸ்ரீபெரும்புதூரில் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகவும் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில் முன்னாள் அமைச்சா்கள் பா.வளா்மதி, பென்ஜமின், சோமசுந்தரம், டி.கே.எம்.சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.