அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

தியாகராய நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்

தியாகராய நகரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்

News image
Updated On :3 மே 2024, 7:18 pm

Din

சென்னை தியாகராய நகரில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வரும் கடைகளை ஒரு வாரத்தில் அகற்றுமாறு சென்னை மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகா் ரங்கநாதன் தெரு, நடேசன் தெரு, மாம்பலம் ரயில் நிலைய பகுதிகளில் அனுமதியின்றி சாலையோரத்தில் ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பாதசாரிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வரும் கடைகளை ஒரு வாரத்தில் அகற்றுமாறு சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை அதன் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் காலி செய்யவில்லை என்றால் அந்த கடைகள் அகற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.