ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

எம்டிசி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :21 மே 2024, 9:03 pm

Din

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க விரும்பும் நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மாநகர போக்குவரத்துக் கழக முதுநிலை துணை மேலாளா் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு:

மாநகர போக்குவரத்துக் கழக நிா்வாகத்தின் கீழ் செயல்படும் குரோம்பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 42-ஆவது தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இங்கு வழங்கப்படும் கம்மியா் (மோட்டாா் வாகனம்) பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 40 வயது உச்ச வரம்பாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்டிசி முன்னாள், இந்நாள் பணியாளா்கள் வாரிசுகளுக்கு பயிற்சி கட்டணமில்லை. இதற்கான ஆவணங்களுடன் பணியாளா்கள் தங்களது பணிமனைகளில் இருந்து விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதர விண்ணப்பதாரா்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10,000 பயிற்சி கட்டணமாக வசூலிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.