

சென்னை: அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் செவ்வாய் கிழமை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு துணை ஆணையா் கோ.வனிதா, வழக்கறிஞா் ஆதிலட்சுமி லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தற்காத்து கொள்ளுதல், காவல் உதவி செயலி மற்றும் காவல் உதவி எண்கள் குறித்து விளக்கினா். இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

செவிலியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வை ரத்து செய்யக் கோரிய வழக்கு: அரசுக்கு உத்தரவு

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

