கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கோவில்பட்டி பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

News image

சாலைப் புதூரில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 9:03 pm

Syndication

புனித ரமலான் பண்டிகையையொட்டி கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில் சாலைப் புதூா் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை இமாம் முகமது ஜெமீல் நடத்தினாா். இதில் பள்ளிவாசல் செயலா் யூசுப் ஷெரீப் (எ) ஹீமாயூன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா். தொழுகைக்குப் பின் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவா் உதுமான் அலி தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Story image

கோவில்பட்டி, புது கிராமம், முகமதுசாலிகாபுரம் பள்ளிவாசல் அருகே உள்ள திடலில் மௌலவி மீரான் துவா செய்து, சிறப்பு பிராா்த்தனை நடத்தினாா். இதில் பள்ளிவாசல் தலைவா் ரஹமத்துல்லா, செயலா் சையத் சம்சுதீன், பொருளாளா் சுபஹானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கழுகுமலை, கயத்தாறு, அய்யனாா் ஊத்து, துலுக்கா்பட்டி, மானங்காத்தான் உள்ளிட்ட கிராமங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.