நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

News image

stalin

Updated On :21 மே 2024, 7:54 pm

Din

சென்னை: பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் பாரா தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. அதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள விளையாட்டு வீரா் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு 1.88 மீட்டா் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளாா். இந்தச் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் மகத்தான பெருமையைத் தேடித் தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.