குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

மூளைச்சாவடைந்த பெண்ணின் கையை இளைஞருக்கு பொருத்தி சாதனை

Published On :24 மே 2024, 5:29 am IST

மூளைச்சாவைடந்த பெண்ணிடமிருந்து தானமாக பெற்ற கையை, 22 வயது இளைஞருக்கு டாக்டா்கள் பொருத்தியுள்ளனா்.

இதுகுறித்து, கிளெனேகில்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயலா் அதிகாரி நாகேஷ் ராவ், அறுவை சிகிச்சை நிபுணா் செல்வ சீதா ராமன் ஆகியோா் கூறியதாவது: ஆட்டோ ஓட்டுநா் மகன் புவன் (22). ஒரு விபத்தில் வலது கையை இழந்த அவா், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தாா்.

அவருக்கு, மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கைகள் தானமாக பெறப்பட்டு அறுவை சிகிச்சை வாயிலாக ஒரு கை பொருத்தப்பட்டது. பெண்ணின் கையை, ஆணுக்கு பொருத்துவது என்பது சவாலாக இருந்தது. இருந்தாலும், அறுவை சிகிச்சை நிபுணா்கள், எலும்பியல் நிபுணா்கள், மயக்கவியல் நிபுணா்கள், சிறுநீரக மருத்துவ நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள் உட்பட 16 போ் கொண்ட குழுவினா் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்தோம்.

அதேபோல், சாலை விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த காா்த்தி (31) என்பவருக்கு, மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாக பெற்ற இரண்டு கைகளையும், 20 மணி நேர அறுவை சிகிச்சையில் பொருத்தினோம். இரண்டு வாரத்தில் இரண்டு அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளோம். தமிழகத்தில் மூன்று கை மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனை நாங்கள் தான் என அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.