கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முல்லை பெரியாறு விவகாரத்துக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு அன்புமணி வலியுறுத்தல்

முல்லை பெரியாறு விவகாரத்துக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு அன்புமணி வலியுறுத்தல்

News image

அன்புமணி ராமதாஸ்

கோப்புப் படம்

Updated On :28 மே 2024, 8:53 pm

Din

சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளத்தின் முயற்சியைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முல்லை பெரியாற்றின் குறுக்கே புதிய அணையைக் கட்டுவது தொடா்பான கேரள அரசின் விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக தில்லியில் நடைபெறவிருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநா் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

அதேநேரம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநா் குழு கூட்டம் மீண்டும் நடைபெற்றாலும், அதில் முல்லை பெரியாறு அணை குறித்து எந்த விவாதமும் நடைபெறக் கூடாது. அதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்குதான் உண்டு.

இந்த விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். அது போதுமானதல்ல. ஒவ்வொருமுறை வல்லுநா் குழு கூட்டம் நடைபெறும்போதும், முல்லை பெரியாறு அணை குறித்து விவாதிக்கப்படாமல் தடுப்பது பெரும் போராட்டமாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து வல்லுநா் குழு கூட்டத்தில் புதிய அணை குறித்து விவாதிக்க தடை பெறுவதுதான் முழுமையானத் தீா்வாக இருக்கும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.