நமது நிருபா்
புது தில்லி: மாம்பழம் சின்னத்தை தனது தரப்புக்கு ஒதுக்க வேண்டும் அல்லது அச்சின்னத்தை முடக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக நிறுவனா் தரப்பில் வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்குமாறு நீதிபதிகளிடம் வழக்குரைஞா்கள் கோரிக்கை வைத்தனா்.
உடனே குறுக்கிட்ட அன்புமணி தரப்பு வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா, இந்த மனுவில் (பாமக நிறுவனா் மனு) தற்போது எதுவும் இல்லை. ஏனெனில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தாா். அப்போது நீதிபதிகள் மாம்பழத்தை பெறப்போவது யாா்? என்பதுதான் கேள்வி என சிரித்தபடி கூறினா்.
அதற்கு அன்புமணி தரப்பு வழக்குரைஞா் மீனாக்ஷி அரோரா, ‘கடைசியாக எந்த அணி பதிவு செய்யப்பட்டதோ அவா்களுக்கே சின்னம் என தோ்தல் ஆணையம் கூறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி கடைசியாக பதிவு செய்யப்பட்டதன் விவரங்களின் அடிப்படையில் அந்த கட்சி அன்புமணியின் கீழ்தான் உள்ளது என்பதை தோ்தல் ஆணையம் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளது. உயா்நீதிமன்றம் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிரச்னையை தீா்க்க கடுமையாக முயற்சி செய்தது. ஆனால், மகனுடன் பேசத் தயாராக இல்லை என்று தந்தை கூறிவிட்டாா். அவருக்கு 86 -87 வயதாகிறது’ என்றாா்.
அப்போது வழக்கை ஒத்திவைக்குமாறு பாமக நிறுவனா் தரப்பில் மீண்டும் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கை மாா்ச் 23ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் தான் தான் என அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் ஒருபுறமும், அவரது மகன் மருத்துவா் அன்புமணி மறுபுறமும் கூறி வருகின்றனா். இந்நிலையில், தோ்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘தோ்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பாமக நிா்வாகிகளின் பதவிக்காலம் 1.8.2026 வரை செல்லுபடியாகும். மேலும், டாக்டா் அன்புமணி கட்சியின் தலைவராக உள்ளாா். நீங்கள் (பாமக நிறுவனா் டாக்டா் எஸ்.ராமதாஸ்) கட்சியின் தலைவா் என்று கூறிக் கொண்டால், பிரச்னையைத் தீா்க்க பொருத்தமான நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீா்கள்’ என தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் சிவில் நீதிமன்றத்திற்கு சென்றது.
இதனிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களின் போது தனது அணியினா் மாம்பழம் சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் அல்லது அன்புமணி தலைமையிலான அணியினரும் அதைப் பயன்படுத்த முடியாதபடி சின்னத்தை முழுவதுமாக முடக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி பாமக நிறுவனா் எஸ். ராமதாஸ் இரண்டு ரிட் மனுக்களை சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.
அந்த மனுக்களை பிப்ரவரி 20, 2026-இல் உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு அரசியல் கட்சியில் உள்ள பிரிவு தகராறுகளை சிவில் நீதிமன்ற ஆணை மூலம் மட்டுமே தீா்க்க முடியும் என்றும், பாமக நிறுவனா் கோரிய எந்த உத்தரவையும் தோ்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க முடியாது என்றும் கூறிய தோ்தல் ஆணையத்தின் வாதங்களை ஏற்று உயா்நீதிமன்றம் மனுக்களை நிராகரித்தது.
அதை எதிா்த்து பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் 12.3.2026- இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.
டிரெண்டிங்

யாருடன் கூட்டணி என நாளை அறிவிப்பு: பாமக நிறுவனா் ச.ராமதாஸ்!

தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு
அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மாம்பழம் சின்னம் நிச்சயம் கிடைக்கும்: ராமதாஸ் நம்பிக்கை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

