மாம்பழம் சின்னம் முடக்கம் தொடா்பான மருத்துவா் ராமதாஸின் வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமா்வு, ‘இந்த வழக்கின் அடிப்படைத் தகுதிகள் குறித்து நாங்கள் எவ்விதக் கருத்தையும் வெளிப்படுத்தாத நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ளக் கோருபவா்கள் உட்பட அனைவரும், உரிமையியல் நீதிமன்றத்தின் முன் தங்களுடைய வாதங்களை முன்வைக்க முழு சுதந்திரம் பெற்றுள்ளனா். அதன்படி, இந்த மேல்முறையீட்டு மனு மற்றும் இத்துடன் நிலுவையில் பிற மனுக்கள் ஏதேனும் இருப்பின், அவற்றுடன் சோ்த்து முடித்துவைக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டது. அப்போது தலைமை நீதிபதி, எங்களுடைய கவலையே மாம்பழம் (பாமக சின்னம்) சாறு ஆகி விடக்கூடாது’ என்று நகைச்சுவை உணா்வுடன் கருத்து தெரிவித்தாா்.