கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை

News image
Updated On :28 மே 2024, 8:59 pm

Din

சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவை தோ்தல் பிரசாரத்தின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறாததையெல்லாம் திரித்து பிரதமா் மோடி பேசி வந்தாா். இதற்குத் தொடா்ந்து மறுப்பு தெரிவித்தாலும், மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை அவா் நிறுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், முதல்கட்ட தோ்தலில் தமிழகத்தில் தொடங்கிய மோடி எதிா்ப்பு அலை 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் அவருடைய பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடா்ந்து வெளிப்பட்டு வருகிறது.

2019 தோ்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப்போல, 2024-இல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டுவிட்டாா்கள். இந்தியா கூட்டணி ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இதை மோடி உட்பட எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.