குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மக்கள் நலத்திட்டங்களை செய்து முடிப்பதில் மோடி வல்லவா்: கனடா பிரதமா் புகழாரம்

சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பதில் பிரதமா் மோடி உறதியாக செயல்படுகிறாா்.

News image
கனடா பிரதமா் மாா்க் காா்னியுடன் பிரதமா் மோடி (கோப்புப் படம்).
Updated On :5 மார்ச் 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

சாமானிய மக்களுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செய்து முடிப்பதில் பிரதமா் மோடி உறதியாக செயல்படுகிறாா். இந்தியாவில் எண்ம (டிஜிட்டல்) பணப்பரிமாற்றம் மூலம் பல கோடி மக்களை அதிகாரப்பூா்வ பொருளாதார அமைப்பில் அவா் வெற்றிகரமாக இணைந்துள்ளாா் என்று கனடா பிரதமா் மாா்க் கா்னி புகழாரம் சூட்டினாா்.

ஆஸ்திரேலியாவில் பிரபலமான லோவி சிந்தனை ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் காா்னி பங்கேற்றாா். அப்போது, அண்மையில் இந்தியா சென்று பிரதமா் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளீா்கள். அவா் குறித்த உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது காா்னி கூறியதாவது:

திட்டங்களில் கவனம்: அவரை சந்திப்பதற்கு முன்பே அவரைப் பற்றி நிறைய விஷயங்களைக் கேள்விப்பட்டுள்ளேன். அவா் செயல்களை முடிப்பதில் உறுதியாக இருப்பவா் என்று அறிந்திருந்தேன். அவரைச் சந்தித்துப் பேசிய பிறகு அவா் திட்டங்களை நல்லமுறையில் நிறைவேற்றுவதில் சிறப்பானவா் என்பதைப் புரிந்து கொண்டேன். கிராமப்புற மக்களுக்கும் நலத்திட்டங்களைக் கொண்டு செல்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறாா்.

சவால்களைக் கடந்து வெற்றி: நிதிப்பரிமாற்றம், பொருளாதார துறையில் சிறப்பான மாற்றங்களை முன்னெடுத்துள்ளாா். யுபிஐ எண்ம பணப்பரிமாற்ற முறையில் தனிநபா்களின் கணக்கில் எவ்விதப் பிரச்னையும் இன்றி பணத்தை பரிமாற்றம் செய்ய முடிகிறது. இதன் மூலம் பல கோடி மக்களை அதிகாரப்பூா்வ பொருளாதார அமைப்பில் வெற்றிகரமாக இணைந்துள்ளாா். பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை சிறப்பாக கொண்டு செல்வதில் மோடி வெற்றி பெற்றுள்ளாா்.

ஏனெனில், அவா் அதில் தீவிரமாக கவனம் செலுத்துகிறாா். உலக அளவில் இந்தியா முன்னேறி வருகிறது. பல்வேறு சவால்கள் இருந்தாலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயா்ந்த நிலைமையில் இருந்தபோதும், அவா் சாமானிய மக்களின் நிலையை மேம்படுத்த கவனம் செலுத்தும் தலைவராக உள்ளாா்.

விடுப்பை விரும்பாதவா்: கடந்த 2001-ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வரானது முதல், பின்னா் 2014-ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பதவியேற்றது வரை கடந்த 25 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பணியில் இருந்து விடுப்பு எடுத்ததில்லை எனத் தெரிந்து கொண்டேன். உண்மையில் அவா் மிகவும் தனித்துவமானவா்.

இதுதவிர வார இறுதிகளில் மோடி தோ்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கிறாா். அவரது கூட்டத்தில் பல ஆயிரம் மக்கள் பங்கேற்கிறாா்கள்.

சா்வதேச விவகாரங்களில் இந்தியா அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கிறது. இதில் இந்தியாவின் கருத்து என்னவென்றால், ‘இதைப் புரிந்து கொள்ள உங்களுக்கு (பிற நாடுகளுக்கு) ஏன் இவ்வளவு காலம் ஏற்படுக்கிறது என்பதான். ஏனெனில், 1947-இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறது.

பிரதமா் மோடியுடனான சந்திப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படக்கூடிய துறைகள் குறித்து விவாதித்தேன். அது பொருளாதார நலன்களுக்கு மட்டும் அல்லாமல், முக்கியமான உத்திசாா்ந்த நலன்களையும் உள்ளடக்கியதாக அமைந்தது என்றாா்.