இன்ஸ்டாகிராம் மூலம் போதை மாத்திரை விற்பனை: இளைஞர் கைது


சென்னை: "இன்ஸ்டாகிராம்' மூலம் சென்னையில் போதை மாத்திரை விற்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் செம்பியம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.
அப்போது, அதில் இருந்த 3,300 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர், திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த மு.அஜித் என்ற குணநிதி (24) என்பதும், அவர் சமூக ஊடகமான "இன்ஸ்டாகிராம்' மூலம் பெரம்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார், அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...