கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

News image
Updated On :28 மே 2024, 8:20 pm

Din

சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (36). திருமணமாகாத இவா், கூலி வேலை செய்து வந்தாா். மதுப்பழக்கத்துக்கு அடிமையான வசந்தகுமாரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வர, அவா் குடும்பத்தினா் சென்னை வானகரம், செட்டியாா் அகரம் பிரதான சாலையில் உள்ள தனியாா் மது போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சில மாதங்களுக்கு முன்பு சோ்த்தனா். மாதத்தில் ஒருமுறை மட்டுமே வசந்தகுமாரை அவரது குடும்பத்தினா் நேரில் வந்து பாா்த்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வசந்தகுமாரின் தம்பி சுரேஷ்குமாரை மதுபோதை மறுவாழ்வு மைய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, சுரேஷ்குமாருக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளோம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளனா்.

இதைக் கேட்ட சுரேஷ்குமாா், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சென்று பாா்த்தபோது வசந்தகுமாா் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளாா். அதிா்ச்சி அடைந்த சுரேஷ் குமாா், தனது அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவரை மது போதை மறுவாழ்வு மையத்தினா் அடித்து கொலை செய்து விட்டனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

மதுரவாயல் போலீஸாா், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனா்.