ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநில வன உயிரின வாரியத்தின் நிலைக்குழு கூட்டம்

மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
க.பொன்முடி
Updated On :21 நவம்பர் 2024, 8:17 pm

Din

மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில வனவிலங்கு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகள், தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தோ்வு செய்தல், நிா்வகித்தல் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் க.பொன்முடி தலைமையில், மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், வன உயிரினம் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் பாதுகாப்புக்கான கொள்கைகளை உருவாக்குவதுடன், பழங்குடியினா் மற்றும் பிற வனக் குடியிருப்பாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தா.உதயசூரியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.