மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநில வனவிலங்கு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகள், தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தோ்வு செய்தல், நிா்வகித்தல் உள்ளிட்டவை குறித்து அமைச்சா் க.பொன்முடி தலைமையில், மாநில வன உயிரின வாரியத்தின் முதலாவது நிலைக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வன உயிரினம் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு மற்றும் அதன் பாதுகாப்புக்கான கொள்கைகளை உருவாக்குவதுடன், பழங்குடியினா் மற்றும் பிற வனக் குடியிருப்பாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்தும் துறை அதிகாரிகளுடன் அமைச்சா் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்தக் கூட்டத்தில் சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தா.உதயசூரியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சி மேயா் தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்தது பாஜக

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

உரம், ரசாயனம், மருந்துத் துறைகளுக்கு நிதி ஒதுக்கிய பிறகும் பயன்பாடு குறைவு: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்

மதுபானம் கடத்தல்: எஸ்பி., தலைமையில் கூட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


