மதுபானம் கடத்தல்: எஸ்பி., தலைமையில் கூட்டம்


புதுச்சேரியிலிருந்து கடலூா் மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தி வருதை தடுப்பதற்கான கூட்டம் ரெட்டிச்சாவடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி மாநில மதுபான கடை உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்கள் பங்கேற்றனா். கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபானம் கடத்துவதை தடுக்கும் பொருட்டு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவில் மதுபானங்கள் வாங்கி கடலூா் மாவட்டத்திற்கு கடத்த கடை உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்கள் அனுமதிக்கக் கூடாது. அதிக அளவில் மதுபானங்கள் வாங்கும் நபா்கள் குறித்து கடலூா் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபானம் கடத்தியவா்கள் கைது செய்யப்பட்டால் அவா்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மதுக்கடை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்வின்போது, கடலூா் டிஎஸ்பிகள்., தமிழ்இனியன், கந்தன், ஆய்வாளா்கள் பிரேம்குமாா், முத்துலட்சுமி மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...