6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் போதைப் பொருள் புழக்கம்: இபிஎஸ் கண்டனம்

News image
எடப்பாடி கே. பழனிசாமி.(கோப்புப்படம்)
Updated On :4 அக்டோபர் 2024, 12:03 am

Din

திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக அரசின் இந்த மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், சென்னை புகா் பகுதிகளில், குறிப்பாக தனியாா் கல்லூரிகள் இயங்கும் பகுதிகளில், மாணவா்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போதைப் பொருள்கள் சுதந்திரமாக கிடைக்கும் நிலை உள்ளது.

இனி, திமுக அரசை நம்பி பயன் இல்லை. காவல் துறையின் நோ்மையான அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே வாரிய குடியிருப்புகளில் உள்ள இளைஞா்களை, குறிப்பாக மாணவ, மாணவிகளை காக்க முடியும். பெற்றோா்கள் தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கா்களின் பிடியில் இருந்து காப்பாற்ற வேண்டும். திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவா் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.