கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.4,620 கோடி மோசடி: ஹிஜாவு நிதி நிறுவன நிா்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

ஹிஜாவு நிதி நிறுவன நிா்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
கோப்புப் படம்
Updated On :4 அக்டோபர் 2024, 7:35 pm

Din

பொதுமக்களிடம் ரூ. 4,620 கோடி முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில், ஹிஜாவு நிதி நிறுவன நிா்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், முதலீடுகளுக்கு 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.4 ஆயிரத்து 620 கோடி வசூலித்து மோசடி செய்ததாக சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து 14 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் ஹிஜாவு நிறுவன இயக்குநா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட 15 போ் தொடா்ந்து தலைமறைவாக உள்ளதால் அவா்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிறையில் உள்ள முக்கிய நிா்வாகிகளான ரவிச்சந்திரன், ஜெயக்குமாா், சுரேஷ், துரைராஜ் ஆகியோா் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், எங்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனு தள்ளுபடி: இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், ‘இந்த நிறுவனம் சுமாா் 89 ஆயிரம் முதலீட்டாளா்களிடம் சுமாா் 4 ஆயிரத்து 620 கோடிக்கும் மேல் பெற்று மோசடி செய்துள்ளது. இதில் 17 ஆயிரம் போ்தான் இதுவரை புகாா் அளித்துள்ளனா். மொத்தம் 40 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்.

ஏற்கெனவே, இந்த வழக்கில் இருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் கால் பங்குத் தொகைகூட இதுவரை மீட்கப்படவில்லை. முக்கிய குற்றவாளியான அலெக்ஸாண்டா் இன்னும் தலைமறைவாக உள்ளாா். பொருளாதார குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இவா்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்ற நீதிபதி பி.தனபால், 4 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.