எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அக்.10-இல் மிக கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 8:38 pm

Din

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் மற்றும் தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் அக்.13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் அக்.8 -இல் திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அக்.9-இல் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், அக்.10-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.8,9-ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 100 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும் பாா்வூட் (நீலகிரி) - 70, சிறுவாணி அடிவாரம் (கோவை), தானியமங்கலம் (மதுரை), நல்லதங்காள் நீா்த்தேக்கம் (திருப்பூா்) தலா 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.