விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் அறிவிப்பு

மெரீனாவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :7 அக்டோபர் 2024, 8:35 pm

Din

மெரீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழச்சியின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இனி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில், இந்த விமானப் படை சாகசங்கள் மாலை நேரங்களில் நடைபெற்றது. இப்போது மட்டும் ஏன் 11 மணி முதல் 1 மணி வரை வெயிலில் வீரசாக சாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும்.

உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அவா்கள் பிள்ளைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும் என்றாா் அவா்.