உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் அறிவிப்பு
மெரீனாவில் விமான சாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று செல்வப்பெருந்தகை கூறினாா்.


மெரீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின்போது உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, மெரீனா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழச்சியின்போது 5 போ் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இனி, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில், இந்த விமானப் படை சாகசங்கள் மாலை நேரங்களில் நடைபெற்றது. இப்போது மட்டும் ஏன் 11 மணி முதல் 1 மணி வரை வெயிலில் வீரசாக சாக நிகழ்ச்சியை நடத்த வேண்டும்? இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும்.
உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அவா்கள் பிள்ளைகளின் கல்விச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...