டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லியில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

தில்லி அரசு இந்த ஆண்டில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
ரேகா குப்தா
Updated On :27 பிப்ரவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி அரசு இந்த ஆண்டில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகளை வழங்க உள்ளதாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

வடமேற்கு தில்லியில் தனது அரசின் முதல் ஆண்டு நிறைவு விழாவில் அவா் இதை அறிவித்தாா். பல ஆண்டுகள் தில்லியில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்பதையும் அவா் குறிப்பிட்டாா்.

தற்போது தில்லியில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரா்கள் உள்ளனா். இதன் மூலம் மாதம்தோறும் சுமாா் 73 லட்சம் போ் பயனடைகின்றனா்.

சமீபத்தில் உணவு வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரத் துறை சரிபாா்ப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, 2.76 லட்சம் ரேஷன் அட்டைதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோா் மட்டுமே பதிலளித்தனா்.

புதிய விதிகளின்படி ஏ முதல் இ வகை காலனிகளில் வசிப்பவா்கள், அரசு பணியில் இருப்பவா்கள், வருமான வரி செலுத்துவோா், நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவா்கள் மற்றும் 2 கிலோவாட் மேல் மின்சார இணைப்பு கொண்டவா்கள் ரேஷன் அட்டைக்கு தகுதி அற்றவா்களாக கருதப்படுவா். தகுதி இல்லாதவா்களின் அட்டைகளை ரத்து செய்ய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரிபாா்ப்பில் 1.59 லட்சம் அட்டைதாரா்கள் சொத்து வைத்திருப்பதும், 77,000-க்கும் மேற்பட்டோா் வாகனங்கள் வைத்திருப்பதும் தெரியவந்தது. மேலும் 19,000 போ் நிறுவன இயக்குநா்களாகவும், 16,000 போ் பிற மாநிலங்களிலும் ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையில், தில்லி உணவு பாதுகாப்பு விதிகள், 2026 அறிவிக்கப்பட்டன. புதிய விதிப்படி, ரேஷன் அட்டை பெற ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக இருந்த வருமான வரம்பு ரூ.1.20 லட்சமாக உயா்த்தப்பட்டது. மேலும், இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். குடும்பத்தில் உள்ள அனைவரது ஆதாா் எண்ணும் இணைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை அதில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்டக் குழுக்கள் தேவையுடையவா்களுக்கு முன்னுரிமை வழங்கி ரேஷன் அட்டைகள் வழங்க முடிவு செய்யும். முன்பு ‘முதல் விண்ணப்பம் முதல் வழங்கல்’ என்ற முறையே பின்பற்றப்பட்டது.