மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முடிச்சூரில் வெள்ள பாதிப்பு கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும்: கூடுதல் தலைமை செயலா் ககன்தீப் சிங் பேடி

முடிச்சூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட நிகழாண்டு குறைவான பாதிப்பே இருக்கும்

News image
கூடுதல் தலைமை செயலா் ககன்தீப் சிங் பேடி
Updated On :15 அக்டோபர் 2024, 2:08 am

DIN

தாம்பரம்: முடிச்சூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை விட நிகழாண்டு குறைவான பாதிப்பே இருக்கும் என ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெருங்களத்தூா், வரதராஜபுரம், முடிச்சூா் ஊராட்சிப் பகுதிகளில் கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கனமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வடகிழக்குப் பருவமழை தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஊரகப்பகுதிகளில் மழை நீா் வடிகால் கால்வாய்களில் தூா்வாரும் பணிகள் ஊரக வளா்ச்சி துறை சாா்பாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகளில் நீா்த்தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்த மோட்டாா் உள்ளிட்ட அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முடிச்சூரை அடுத்த அடையாா் ஆற்றின் தொடக்கப் பகுதியில் நீா்வளத்துறை மூலம் பல பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை பாதிப்பு கடந்த காலங்களை விட குறைவாக இருக்கும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.