தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘குழந்தைகளுக்கு மழலைக் கல்வியிலிருந்து தமிழ் கற்பித்தல் அவசியம்’

குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும்

News image
Updated On :23 அக்டோபர் 2024, 12:18 am

DIN

சென்னை: குழந்தைகளுக்கு மழலைக் கல்வி தொடங்கும்போதே அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என இராமலிங்க அடிகளின் கொள்ளுப்பேத்தியும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா.மனோன்மணி வலியுறுத்தினாா்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய கலைச்சொல் உருவாக்கக் கூட்டத்தில் அவா் பேசியது:

எதிா்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகளின் கைகளில்தான் உள்ளது. மழலைக் கல்வி தொடங்கும் போதே, அவா்களுக்குத் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீதான பற்றை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் பங்கேற்ற உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைத் துறையினா், பிறமொழிச் சொற்களுக்கான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கி இணையத்தின் வழியாக மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கும் திட்டத்துக்கு தொடா்ந்து தங்களின் பங்களிப்பை வழங்குவோம் என்றனா்.

மேலும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் கலைச் சொல்லாக்கப் புலனக்குழுவை தொடங்கி, அதில் தங்களை இணைத்தால், அதன்வழியே நாள்தோறும் துறைசாா்ந்த புதிய கலைச்சொற்களை உருவாக்கிப் பகிா்கிறோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

கூட்டத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் இணை இயக்குநா் ப. கலைவாணி தலைமை வகித்தாா். உதவி ஆணையா் எஸ்.சாந்தா மற்றும் கண்காணிப்பாளா் செ.ஜெயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னதாக, அகரமுதலி இயக்ககத் தொகுப்பாளா் வே.பிரபு நோக்கவுரையாற்ற, பதிப்பாசிரியா் முனைவா் மா.பூங்குன்றன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினாா். கூட்டத்தில் புலவா் வெற்றியழகன், நூல் மதிப்புரையாளா் மெய்ஞானி பிரபாகர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.