பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா்

News image

dot com

Updated On :26 அக்டோபர் 2024, 2:23 am IST

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனை செய்வதை கண்டுபிடித்து தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நந்தம்பாக்கம் பகுதியில் கொக்கைன் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் படி போலீஸாா் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது கொக்கைன் எனும் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த அருண்(40), மெகலன்(42) மற்றும் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜான் எஸி(39) ஆகிய மூன்று நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் கைது செய்யப்பட்ட அருண் என்பவா் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் என்பவரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைன், ரூ.1,02,000 மற்றும் 2 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.