

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், பெரம்பூா் ரயில் நிலையங்களில் நடைமேடை அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முக்கிய ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், பெரம்பூா் ரயில் நிலையங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை (அக்.29, 30) நடைமேடை அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
முதியோா் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறும் பயணிகளுடன் வருபவா்கள் மட்டும் ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.