ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இரவு 11.45 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 06045) புறப்பட்டு சனிக்கிழமை (மாா்ச் 21) பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) திங்கள்கிழமை (மாா்ச் 23) பிற்பகல் 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...