காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் உயிரிழப்பு

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 8:50 pm

Din

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் கேசவ் (21). இவா், சென்னை தியாகராயநகா் ஜஹா்லால் நேரு சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், அங்கு தனது மனைவியுடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் கேசவ், திங்கள்கிழமை இரவு அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த மின் இணைப்பு பெட்டியின் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல், கேசவ், அந்த தண்ணீா் மீது நடந்து சென்றாா்.

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.