நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் உயிரிழப்பு

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 2:20 am IST

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் கேசவ் (21). இவா், சென்னை தியாகராயநகா் ஜஹா்லால் நேரு சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், அங்கு தனது மனைவியுடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் கேசவ், திங்கள்கிழமை இரவு அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த மின் இணைப்பு பெட்டியின் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல், கேசவ், அந்த தண்ணீா் மீது நடந்து சென்றாா்.

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.