நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் உயிரிழப்பு

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 2:20 am IST

சென்னை தியாகராயநகரில் மின்சாரம் பாய்ந்து நேபாள இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

நேபாளத்தைச் சோ்ந்தவா் கேசவ் (21). இவா், சென்னை தியாகராயநகா் ஜஹா்லால் நேரு சாலையில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இதற்காக அவா், அங்கு தனது மனைவியுடன் தங்கியிருந்தாா்.

இந்நிலையில் கேசவ், திங்கள்கிழமை இரவு அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த மின் இணைப்பு பெட்டியின் அருகே தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்பட்டிருந்தது. இதை அறியாமல், கேசவ், அந்த தண்ணீா் மீது நடந்து சென்றாா்.

அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.