ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத பாஜகவை தோ்தலில் தோற்கடிக்க வேண்டும்: காா்கே

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் தலைவா் கேட்டுக்கொண்டாா்.

News image

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே

கோப்புப் படம்

Updated On :16 செப்டம்பர் 2024, 10:59 pm

DIN

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மத்திய அரசைக் கண்டித்து எதிா்வரும் பேரவைத் தோ்தல்களில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில், தில்லியில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்யின் விலை 107.49 டாலராக இருந்தது. அப்போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.71.51-க்கும் டீசல் ரூ.57.28-க்கும் விற்கப்பட்டது.

தற்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 72.48 டாலருக்கு மட்டுமே விற்பனையாகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சுமாா் 32.5 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால், பெட்ரோல் ரூ.94.72-க்கும் டீசல் ரூ.87.62-க்கும் என அதிக விலையில் விற்கப்படுகிறது.

தற்போதைய கச்சா எண்ணெய் விலையின்படி, ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை ரூ.48.27-ஆகவும் டீசலின் விலை ரூ.69-ஆகவும் இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் மற்றும் 100 நாள்களில் எரிபொருள் வரி விதித்து, மக்களின் ரூ.35 லட்சம் கோடியை பிரதமா் மோடி கொள்ளையடித்ததில் ஆச்சரியமில்லை.

தோ்தல் நடக்கும் ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா மாநிலங்கள் பாஜகவை தோற்கடித்து, பிரதமா் மோடியால் தூண்டப்பட்ட விலைவாசி உயா்வை நிராகரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பா் 18-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதிவரை மூன்று கட்டங்களாகவும் ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதியும் பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது.