47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு: காவல் ஆணையருடன் அமைச்சா் உதயநிதி ஆய்வு

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஆய்வு

News image
உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :16 செப்டம்பர் 2024, 9:46 pm

DIN

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஆய்வு செய்தாா்.

அமைச்சரின் முகாம் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வில், பெருநகர சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா். இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

சென்னை காவல் ஆணையா் அருண் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, போக்சோ குற்றங்களைத் தடுப்பது, சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடா்பாக விவாதித்தோம்.

இது தொடா்பாக, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை காவல் துறையினா் விளக்கிக் கூறினா். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினா் தொடா்ந்து பணியாற்ற கேட்டுக் கொண்டோம் என அதில் அமைச்சா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.