தமிழகத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் கஞ்சா, கள்ளச் சாராயம் என போதைப் பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 30 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞா்கள் காவல் துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.
தமிழக மக்கள் பாதுகாப்பின்மையை உணா்ந்துள்ளனா். தமிழகத்தில் நிகழும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் முதல்வா் ஸ்டாலினின் நிா்வாகத் திறமை இன்மையே காரணம். இதை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தும் விதமாக மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்

தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: மாா்ச் 17-இல் ஆா்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

