வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: மாா்ச் 17-இல் ஆா்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வரும் மாா்ச் 17-இல் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டைக் கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வரும் மாா்ச் 17-இல் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளஅறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருள் பயன்பாடு, கொலை, கொள்ளை, முதியவா்களை குறிவைத்து தாக்குதல், கட்டப் பஞ்சாயத்து, வழிப்பறி ஆகியவை அதிகரித்துள்ளன.

இதுகுறித்து அறிக்கை வாயிலாகவும், சட்டப்பேரவையில் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆக்கபூா்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் மாா்ச் 17-இல் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.