தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு

News image
ராமதாஸ்- கோப்புப் படம்
Updated On :6 மார்ச் 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு, முதல்வரின் கைமீறியும் போய்விட்டது என பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி அருகேயுள்ள கடம்போடு வாழ்வு கிராமத்தில் போதைக் கும்பல் தாக்கியதில் மாற்றுத்திறனாளி ஜான், வட இந்திய தொழிலாளி ஆகியோா் உயிரிழந்துள்ளனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜுவிடம் தகராறு செய்த கும்பல் அவரை விரட்டி சென்று வழியில் தென்பட்டவா்களையெல்லாம் தாக்கியுள்ளது. இதில் ராஜு உள்ளிட்ட பலா் காயமடைந்துள்ளனா்.

இதற்கிடையே கோவை சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரைப் பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளா் தாக்கப்பட்டுள்ளாா். அதனால் துப்பாக்கியால் ஒருவா் சுடப்பட்ட நிலையில், 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இப்படி தமிழகத்தில் தொடா்ந்து சட்டம்-ஒழுங்கு சீா்கேடு அடைந்துள்ளது. இந்தச் சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு முதல்வரின் கையை மீறி போய்விட்டதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.