47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னை - சிங்கப்பூா் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

News image
கோப்புப்படம்.
Updated On :18 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

சென்னை - சிங்கப்பூா் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து இரவு 11.40 மணியளவில் சென்னை வந்து விட்டு, மறுமாா்கமாக அதிகாலை 1.40 மணியளவில் சிங்கப்பூருக்கு மீண்டும் புறப்பட்டுச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை இந்த விமானம் 174 பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

தொழில்நுட்ப வல்லுநா்கள் விமானத்தின் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து 9 மணி நேரம் தாமதமாக புதன்கிழமை காலை 10.32 மணியளவில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.