சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் பதவி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:42 pm

Din

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த ஆக.16 முதல் தலைவா் பதவி காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பதவியை நிரப்புவதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலா் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவா் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தோ்வுக் குழு தமிழக அரசால் நியமிக்கப்பட்டது.

தோ்வுக் குழு முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவா் பதவியை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் செப்.16 வரை வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தோ்வுக் குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பு அக்.4 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவா் பதவிக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.