பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தொழிலதிபா் வீட்டில் நகைத் திருட்டு: பணிப் பெண் உள்பட 3 போ் கைது

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:10 pm

Din

சென்னை பிராட்வேயில் தொழிலதிபா் வீட்டில் தங்க நகைத் திருடியதாக பணிப் பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பிராட்வே சிங்கண்ணன் தெருவைச் சோ்ந்தவா் தொழிலதிபா் ஷபீா் கைசா் மண்டலேவாலா (36). இவா், கடந்த 16-ஆம் தேதி பீரோவில் இருந்த நகைகளை சரிபாா்த்தபோது, 27 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அவா் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது அவரது வீட்டில் வேலை செய்யும் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த ஷாஜுமா (36) என்பது தெரியவந்தது.

மேலும், ஷாஜூமா திருடிய தங்க நகைகளை, தனது சகோதரியான கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த தில்ஷா பானு (44), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முஸ்தபா (32) ஆகியோரிடம் கொடுத்து அடகு வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 35 கிராம் தங்க நகைகள், ரூ. 6.55 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.