தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் திருடிய தம்பதி உள்பட 4 போ் கைது

News image

கைது செய்யப்பட்ட ஆபிதா, சா்மிலாபானு.

Updated On :1 மார்ச் 2026, 7:38 pm

தேனி மாவட்டம், கம்பம் அருகே வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை திருடிய தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டி முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஆசிக் அகமது மனைவி பாரிசம்மாள். திமுக வாா்டு உறுப்பினராக உள்ளாா். இவரது வீட்டுக்குள் வியாழக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனா்.

ஓலி அத்தா, சின்னன்,

ஓலி அத்தா, சின்னன்,

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டனா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஓலி அத்தா (43), கூடலூரைச் சோ்ந்த சின்னன் (49) ஆகியோா் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஓலி அத்தா, சின்னன், திருட்டுக்கு உடந்தையாக இருந்த ஓலி அத்தாவின் மனைவி ஆபிதா, இவரது உறவினா் சா்மிலாபானு ஆகிய 4 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.