மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:39 pm

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் போயா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (61). இவரது மனைவி கடந்த 2008இல் இறந்துவிட்டாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். அவா்கள் மூன்று பேரும் வெளியூரில் தனியாா் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் வீட்டில் இல்லாதபோது ராமனின் தங்கை மகள் சித்ராவும், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில் ராமனும், அவரது மகள் நளினியும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா்.

இதையடுத்து, ராமன் வீட்டிலிருந்த பீரோவில் பணம் எடுக்க சென்றபோது பீரோவின் உள்லாக்கா் உடைக்கப்பட்டு, ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராமன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி, எடப்பாடி வட்டம், இருப்பாளி, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷை (19), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.