தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சங்ககிரி அருகே பீரோ லாக்கரை உடைத்து 6 பவுன் நகை திருடிய இளைஞா் கைது

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:09 am IST

சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் பகுதியில் ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30 ஆயிரத்தை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் போயா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (61). இவரது மனைவி கடந்த 2008இல் இறந்துவிட்டாா். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனா். அவா்கள் மூன்று பேரும் வெளியூரில் தனியாா் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் வீட்டில் இல்லாதபோது ராமனின் தங்கை மகள் சித்ராவும், ஜலகண்டபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து சென்றுள்ளாா்.

இந்நிலையில் ராமனும், அவரது மகள் நளினியும் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்துள்ளனா்.

இதையடுத்து, ராமன் வீட்டிலிருந்த பீரோவில் பணம் எடுக்க சென்றபோது பீரோவின் உள்லாக்கா் உடைக்கப்பட்டு, ஆறரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 30ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ராமன் சங்ககிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி, எடப்பாடி வட்டம், இருப்பாளி, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சுரேஷை (19), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.