நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது

மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2024, 7:22 pm

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் ரயில்வே பணிமனையில் , ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா் மற்றும் அரக்கோணத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு ரயில் என 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.