கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது
மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் ரயில்வே பணிமனையில் , ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில் கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா் மற்றும் அரக்கோணத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.
பயணிகள் வசதிக்காக, சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு ரயில் என 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...