தமிழ்ப் புத்தாண்டையொட்டி நாளை(ஏப்ரல் 14) ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். நாளை இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
It has been announced that Metro trains will operate on a Sunday schedule tomorrow (April 14) to mark the Tamil New Year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










