திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாளை சீதாராம் யெச்சூரி படத் திறப்பு விழா: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு

படத் திறப்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 7:20 pm

Din

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி படத் திறப்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் திங்கள்கிழமை (செப். 23) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகிறாா்.

இந்நிகழ்வுக்கு கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறாா். சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் அசோக் தாவ்லே திறந்துவைத்து உரையாற்றுகிறாா். முதல்வா் ஸ்டாலின் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றுகிறாா்.

நிகழ்வில் தி.க. தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன், விசிக தலைவா் தொல். திருமாவளவன், மாா்க்சிஸ்ட் (எம்.எல்.) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் காதா் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவா் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ., கொமதேக பொதுச் செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பத்திரிகையாளா் என்.ராம் ஆகியோா் நினைவேந்தல் உரையாற்றுகின்றனா்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி நன்றி தெரிவிக்கிறாா்.