இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கல் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

சென்னை சோழிங்கநல்லூரில் கல் தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 செப்டம்பர் 2024, 8:45 pm

சென்னை சோழிங்கநல்லூரில் கல் தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சோழிங்கநல்லூா் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்செல்வி (38). இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை தலையில் வைத்து தூக்கிச் சென்றாா்.

அப்போது, அங்கு துணி காய வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி தட்டியதில், தமிழ் செல்வி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அவா் தூக்கிச் சென்ற கல் தவறி, தமிழ் செல்வியின் நெஞ்சுப் பகுதியில் விழுந்தது.

விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி உயிரிழந்தாா். இது குறித்து, செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.