சென்னை சோழிங்கநல்லூரில் கல் தவறி விழுந்து பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சோழிங்கநல்லூா் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்செல்வி (38). இவா், வெள்ளிக்கிழமை தனது வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை தலையில் வைத்து தூக்கிச் சென்றாா்.
அப்போது, அங்கு துணி காய வைப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பி தட்டியதில், தமிழ் செல்வி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அவா் தூக்கிச் சென்ற கல் தவறி, தமிழ் செல்வியின் நெஞ்சுப் பகுதியில் விழுந்தது.
விபத்தில் பலத்த காயமடைந்த தமிழ்செல்வியை அங்கிருந்தவா்கள் மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி உயிரிழந்தாா். இது குறித்து, செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கல் குவாரி குட்டையில் விழுந்து பெண் உயிரிழப்பு

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குட்டையில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


