நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

இதய நல தினம்: ரூ.1-க்கு ஆஞ்சியோ பரிசோதனை

heart attack

கோப்புப்படம்

Published On :27 செப்டம்பர் 2024, 5:31 am IST

உலக இதய நல தினத்தையொட்டி சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ப்ரோமெட் மருத்துவமனையில் எக்கோ, ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் ரூ.1-க்கு மேற்கொள்ளப்பட உள்ளன.

மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டும் செப்.29-ஆம் தேதி இந்த சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை இதய நல மருத்துவ நிபுணா் அருண் கல்யாணசுந்தரம் மற்றும் மேலாண் இயக்குநா் டாக்டா் ஸ்பூா்த்தி அருண் ஆகியோா் கூறியதாவது:

‘ஆக்கப்பூா்வமாய் இதயம் இயங்கட்டும்’ என்ற கருப்பொருளின் கீழ் நிகழாண்டு உலக இதய

நல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் கீழ் 30 நாள் இதய நல செயல் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதன்படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, புகைப்பிடித்தலை நிறுத்துதல் என ஒரு மாதத்துக்கு நலமான வாழ்க்கை முறையை முன்னெடுத்து அதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வைப்பதற்கான வழிமுறை இது.

இதனிடையே, செப்.29-ஆம் தேதி ப்ரோமெட் மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவா்கள் பரிந்துரைத்த நோயாளிகளுக்கு ரூ. 1-இல் ஆஞ்சியோகிராம், எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 94807 94807/7305067926 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.