ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 13-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
அண்ணா பல்கலை- Din
Updated On :29 செப்டம்பர் 2024, 6:03 pm

Din

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 13-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை கடிதம் வந்துள்ளது.

இது குறித்து உடனடியாக கோட்டூா்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். ஆனால், அங்கு வெடி பொருள்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு தொடா்ந்து 13-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.